Saturday, November 14, 2015

நான் ஒரு சராசரி

நான் ஒரு சராசரி
செய்வதோ மனதில் பட்டது சரி
பண்செய்ய எனக்கென்று ஒரு முறை
இருந்தும் உள்ளதோ என்னுள் சில குறை
வளர்த்தேன் என்னுள் பல அரண்
இடையில் ஏனோ சில முரண்
காரணம் நான் ஒரு சராசரி
செய்வதோ மனதுக்கு பட்டது சரி

கவிதையாய் என்னுள் அருவி சாரல்
வார்த்தையோ சில நாள் மறையும் தூறல்
மனம் கொள்ளும் என் ஏவல்
சில நாளோ அங்க‌ங்கு நல்ல தாவல்
காரணம் நான் ஒரு சராசரி
செய்வதோ மனதில் பட்டது சரி

மாற்றமே எந்தன் மாறிலி
மாற்றத்தால் என்னுள் சிலவலி
சீற்றத்தால் என்னுடன் சில பகை
ஏற்றமோ தந்தது நல்ல வகை
காரணம் நான் ஒரு சராசரி
செய்வதோ மனதுக்கு பட்டது சரி

என் மனமோ திறந்தவெளி
இருந்தும் உள்ளதோ சில இடைவெளி
படிக்கா என்னுள் பல சுவடுகள்
தானாய் மறையும் சில கவடுகள்
காரணம் நான் ஒரு சராசரி
செய்வதோ மனதுக்கு பட்டது சரி

ஆராயும் திறம் கொண்ட என் மனம்
அதனுள் ஓடாமலே ஒளியும் சில தினம்
பிறர் குறை கண்டு செய்யும் புலம்பல்
தன் நிறைக்கு மட்டும் வேண்டும் அலம்பல்
காரணம் நான் ஒரு சராசரி
செய்வதோ மனதில் பட்டது சரி


-           செல்வா

No comments:

Post a Comment