Saturday, May 7, 2016

அன்னையர் தினம்


உலகம் உருள உதவும் உன்னதம்
அகிலம் அளக்க இயலா அற்புதம்
எங்கும் நிறைந்த
அன்னை நீயே உலகின்
உரைக்க முடியா வேதம்

அன்னையின் அன்பு இதயம்
காலத்தை வெல்லும் காவியம்
நாளும் நனைந்த
மனம் காணும் அன்னையே
நித்தம் வாழ்வின் அழியா சத்தியம்

அன்பின் அணையாவிளக்கு அன்னையே
நன்னெறியில் வளர்த்தாய் என்னையே
அன்னையர் தினம்
அகிலம் கொண்டாட
எல்லாப் பெண்களில் கண்டேன் உன்னையே

- செல்வா

No comments:

Post a Comment