உலகம் உருள உதவும் உன்னதம்
அகிலம் அளக்க இயலா அற்புதம்
எங்கும் நிறைந்த
அன்னை நீயே உலகின்
உரைக்க முடியா வேதம்
அன்னையின் அன்பு இதயம்
காலத்தை வெல்லும் காவியம்
நாளும் நனைந்த
மனம் காணும் அன்னையே
நித்தம் வாழ்வின் அழியா சத்தியம்
அன்பின் அணையாவிளக்கு அன்னையே
நன்னெறியில் வளர்த்தாய் என்னையே
அன்னையர் தினம்
அகிலம் கொண்டாட
எல்லாப் பெண்களில் கண்டேன் உன்னையே
- செல்வா
No comments:
Post a Comment