Monday, September 12, 2016

கஜல் துளிகள் 4

சுவரில்லா சித்திரம் காதலென உரைத்தாய்
காணும் முன்னே ஏனோ கண்ணைப் பறித்தாய்

கல்லுக்குள் ஈரம் காண முடியவில்லை
கண்ணின் ஈரமோ இன்னும் காயவில்லை

காதலால் கனவுகள்பல கண்டுக்களித்தேன்
காதலின்றி என்றும் கனவுகளில் விழித்தேன்

தினமும் காதல்பாடம் படித்திட நினைத்தேன்
காதல் படிப்பினைக் கண்டு இன்று நொந்தேன்

1 comment: