கவிதைகள் காணவில்லை
=========================
கவிதைகள் காணவில்லை
சில நாட்கள் ஏனோ
வந்து சேரா எண்ணங்களோ
வடிவிழந்த வார்த்தைகளோ
வலுசேரா மனவோட்டமோ
வாட்டும் தினசரி அலுவல்களோ
வாசம் மறந்தேனேனோ
வெற்றிடத்தில் சிக்கினேனோ
வந்தும் வாராமல் ஏனோ
கவிதைகள் காணவில்லை சில நாட்கள்
No comments:
Post a Comment