என்னைப் போல்...
=================
உன்னால் எனக்கு தினம் போராட்டம்
கண்டேன் பல தொல்லைகள்
உன்னால் ஏனோ
ஆத்திரத்தில் கோவத்தின் உச்சியில்
என் மேலாளர் உடன் அவனென் நண்பன்
எதை செய்யவில்லைஎதை செயதேன்
காரணம் அறியாமல் பாவமாய்
சிறுபரிதவிப்பின்றி தலைக்குனிந்து
மௌனமாய் நான்
சில நிமிடங்கள் செல்ல அவனே
என்னிடம் வந்து வா செல்லலாம்
தேநீர் அருந்த; சென்றேன் அவனுடன்
சிறுபுன்னகையுடன் நடந்ததைப் பற்றி
எந்த நினைவின்றி ....
அலுவல் முடித்து வீடு புகும் முன்
பலத்த மனைவியின் சத்தம்
எத்தனை முறை உனக்கு
சொல்லிக் கொடுக்க...
தப்பைத் தப்பாமல் செய்கிறாய்
உனக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை
என்று அழுத்தமாய் எங்கள் மகனைக்
சில அடியுடன் கடிந்தாள்.
காரணம் அறியாமல் பாவமாய்
சிறுபரிதவிப்பின்றி தலைக்குனிந்து
மௌனமாய் என் மகன்...
சிறுநேரத்தில் சாதம் ஊட்டினாள்
மனைவி; சலனமின்றி
சுவைத்ததுண்டான் உணவை
என் செல்ல மகன்...
காலை ஞாபகம் என் கண்முன்னே நின்றது
என்னைப் போல்....