உரைக்கா எண்ணம்
==================
உரைக்கா எண்ணம் என்றும்
உண்டு நெஞ்சினிலே
ஏனோ அதெழும்
ஏனோ சொல்ல இயலாமல் விழும்
தேவையின்மையோ...
இயலாமையோ...
பொறையுடைமையோ...
சூழ்நிலையோ...
சந்தர்ப்பமோ...
சந்தேகமோ...
சந்தோஷமோ....
இயல்போ...
எதிலும் சேர்க்கலாம்
எல்லாவற்றையும் சேர்க்கலாம்
உரைக்கா எண்ணம் என்றும்
உண்டு நெஞ்சினிலே
உறைக்காவரை
உறையும் அதன் திண்ணம்
சில தினங்கள் உந்தும்
சில தினங்கள்
உடைக்கும் நெஞ்சை
சில தினங்களில்
சொல்லாமல் மறையும்
உரைக்கா எண்ணம் மற்றொன்று
உடன் உதிக்கும்
உரைக்கா எண்ணம் என்றும்
உண்டு நெஞ்சினிலே
உழன்று கொண்டே இன்றும்
No comments:
Post a Comment