Friday, April 8, 2016

உந்தன் காதல்



கனிவது காதல் என்றும்
       தெளிவது நெஞ்சம் என்று
வஞ்சியுன் உள்ளம் நோக்கி
        உயிரது துடிக்கும் உள்ளில்

உளமது உன்னுக்  கில்லை
        என்றதும் நொறுங்க வில்லை
சொல்வது கள்ளம்  என்றும்
       தெரியுது உருகும் உள்ளம்

மல்லிகை மணமும் வீசும்
        கன்னியுன்  விரியும்  கூந்தல்
கனவுடன் எண்ணும் எண்ணம்
        உன்னுடன் என்றும் கொஞ்சும்

சிந்தனை சிதறும் என்னுள்
        சித்திரம் வரையும் கண்ணுள்
பாமரம்  என்றும்  வீசும்
        தாமரை உன்னால் வாழ்வும்

    -   செல்வா

பி.கு: விளம் மா தேமா - வாய்பாடு
   

No comments:

Post a Comment