Saturday, April 9, 2016

கஜல் துளிகள்


நிழலும் முன்செல்லும் நிலவே நீ என்பின் நின்றால்
நிழலும் மறந்தேன் நிலவே நீ என்முன் நின்றதால்

பாவை மனதினில் விழுந்தேன்
உடைந்தது என் மனம் பாவை அங்கில்லை பாறை

எங்கும் செல்லும் காதல் உன்னிடம் செல்லா காதல்
விட்டு செல்லவில்லை என்னிடம் இன்னும்

மறதி நோய் என்னிடம் உன்னை மட்டும் மறக்காதால்
மனதை மறைக்காமல் சொல்ல மறந்ததால் மறதியில் நான்

வானவில்லாக நீ மழைக்காலம் இல்லை உன் மனதினில்
குளிரும் என் நெஞ்சம் கத்திரி வெயிலிலாக நீ என்றாலும்

- செல்வா

No comments:

Post a Comment