Saturday, April 16, 2016

தரிசனம்



தினம் தினம் உந்தன் தரிசனம்
காண வேண்டும் கரிசனம்
ஓடும் உன்பின்னே
ஓடும் காலமோடு
வேண்டும் உந்தன்  அரியாசனம்


என்னை யறியாமலே அனுதினம்
உன்னை சுற்றும் என் புவனம்
கண்ணோடு காண
ஈர நெஞ்சோடு
என்னைக் கட்டும் ஏகபந்தனம்


நாளோடு நான் காணும் நளினம்
காதல்  கொள்ளும் தினம் ஜனனம்
உன்னை நினைக்க
உண்மை  உரைக்க
நெஞ்சோடு காணும் தூவானம்

- செல்வா 

பி.கு: லிமெரிக் வகையில் எழுதியது 

No comments:

Post a Comment