Friday, May 22, 2020

நேர்கோடுகள்

நிறைய காரியங்கள் செய்ததுண்டு
நிறைவைக் கண்டது எத்தனை
உரிய செயல்கள் செய்ததுண்டு
உயர்வை உய்த்தது எத்தனை
தேனொழுக வார்த்தைகள் பேசியதுண்டு
உள்ளத்தை தொட்டது எத்தனை
இயலாமல் இடித்துரைத்தது பலவுண்டு
இயன்றபோது செய்தது எத்தனை
நெஞ்சமறிந்து செயல்கள் பலவுண்டு
இணைந்த நேர்கோடுகள் எத்தனை

No comments:

Post a Comment