பட்டது போதும் என்றேன்
பட்டால்தான் தெளியும்
அறிவு என்றான் அவன்
பட்டுதான் தெரிய வேண்டுமா என்றேன்
பகுத்தறியாது பட்டால்மட்டும்
பயனென்ன என்றான் அவன்
பகுத்தறிந்தால் எல்லாம் புரியுமா என்றேன்
புரியாத ஒன்றையெப்படி
பகுத்தறிவாய் என்றான் அவன்
புரியதான் என்ன செய்ய வேண்டும் என்றேன்
புரிந்தப்பின் என்ன செய்வாய்
என்றான் அவன்
புரியாமல் காரியங்கள் செய்லாமா என்றேன்
பட்டுதான் எல்லாம் உனக்கு
புரியும் என்றான் அவன்
என்றும் என்னை
எதிர்கொண்டு
எதிர்கேள்வி கேட்கும்
என்னுள் என்றும் அவன்
No comments:
Post a Comment