Thursday, March 31, 2016

கலைநயம்


உருமாறும் உணர்விலே
உனையெண்ணி  மறதியில்
தவிக்கிறேன்  தனிமையில்  
துடிக்கிறேன் வெறுமையில்

பனிக்காலம் பொழுதிலே
குளிரோடு மனதினில்
உனதாக்கி கலைநயம்
மயக்கத்தில் களிநடம்

தினந்தோறும் நினைவிலே
கருவோடுக் கருத்துடன்  
உளமாகி உயிரெழக்   
கனவோடுக்  கலைகிறாய்

- செல்வா


பி.கு: புளிமாங்காய் + கருவிளம்  வகையில் வஞ்சித்துறை

No comments:

Post a Comment