Tuesday, March 29, 2016

நட்பாகி


சந்தம் :
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன ...... தனதான

ஒத்திய உணர்வுடன் ஒப்பிய குணங்களும்
நண்பனின் மனமது எனதாகி

நித்தமும் மனதுடன் சுற்றிய இனியவன்
சுட்டெரி கனலிலும் உயிராகி

சத்திய உறவுடன் தொட்டது சுகமது
அக்கண மது துணை உளமாகி

மித்திர னவனது நட்பது இனியது
எப்போதும் அருளது பலகாலம்

உத்தம உரமுள உள்ளத்தில் உருகிடு
மெய்படும் உறுதியில் நட்பாகி

- செல்வா

பி.கு: "கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக் " சந்தத்தில் எழுதியது.

No comments:

Post a Comment