Thursday, March 31, 2016

இறைநிலை

குறைகள் கொண்டும்  
கறைகள் பலவால்  
சிறைப் பட்டாலும்
முறைகள் அறியாவிடினும்
மறைநிலை தம்மில்
இறைநிலை என்றும்
உறைவது உண்டு
மிறையது கொள்ளாமல்
பொறையுடன் உணர்விலே
நிறையது  காண்  

  • செல்வா

பி.கு : மிறை - வருத்தம், வேதனை

No comments:

Post a Comment