என்னை மறந்து எதனுள்ளே ஒளிந்த
என்னை மென்மையாக தொட்டு
சென்றது ஒரு தென்றல்
என்னை மறந்ததை மறந்து
தென்றல் சென்ற திசையில்
தன்னில் பார்வை சென்றது
தென்றல் வரும் திசை
தன்னை நோக்கி நின்றது
பின்நோக்கி என்னை தள்ளியது
தென்றலோடு தன்னை மறந்த காலம்
முன்னில் வந்து நின்றது
மின்னலாய் கண்ணிலே தெரியுது
புன்முறுவல் கொண்டு எண்ணினேன்
பொன்னில் பொறிக்க வேண்டிய காலமது
- செல்வா
No comments:
Post a Comment