Thursday, March 17, 2016

பட்டறிவு



அறிவின் ஆழமது
நிறுத்தும் காலமெது
முறையாய் கற்றாலும்
மறைவழி உணர்த்தும்
நிறைவாய் நிறுத்தும்
அறிவுரையது பட்டறிவு

பட்டால் தான் தெரியும்
பார்வைக்கு பலவை என்றாலும்
பட்டுதான் தானே அறிய
காலமும் இங்கே காணாது
உடலும் மனமும் என்றும் தேறாது

அறிவின் ஆழம் ஏற்று
பார்வைகள்  பலவும் நோக்கு
பட்டதது உன்மேலோ  பிறர்மீதோ
அறிவைக் கொள் பட்டறிவாய்

- செல்வா 

No comments:

Post a Comment