காண வாரீர்! காண வாரீர்!
விசித்திர உலகம்
காண வாரீர்!
மனம்விரித்து காண வாரீர்!
விந்தைகள் பல உண்டு
சிந்தை சிறக்க
காண வாரீர்!
அகந்தையற்று
அக கண்களோடு காண வாரீர்!
சிற்றுலா வருவீர்
எங்கள் விசித்திர உலகை
சுற்றி ஆனந்தம் கொள்வீர்
நிலவுகள்
*************
வான்மதிகள் இரண்டு
வானத்தில் வந்து உலவுது
காணீர்
காலை மாலை என்று
காலம் மாறாது
களங்கமில்லாமல்
கண்ணில் தெரிது
காணீர்
அமாவாசை பௌர்ணமி
என்று பேதமில்லை
தேயும் வளரவும் என்ற
தேற்றம் இங்கில்லை
கண்ணில் அது காணவில்லை
என்றால் கவலை கொள்ளுங்கள்
காதல் உங்கள் நெஞ்லிருந்து
மறைந்தது எண்ணி
நிலவுகளை அது
மறைத்தது எண்ணி
காதல் கொள்வீர்
காதல் கொள்வீர்
கண்ணுக்கு இனிய நிலவுகள்
காண தவறீர்
வண்ணத்தில் நிலவைக் கண்டால்
குழம்பாதீர்
எங்கள் வானத்தில்
பல வண்ணத்தில்
நிலவுகளைக் காணலாம்
கண்டு களிப்பு அடைவீர்
விசித்திர உலகின்
விந்தை ஒன்றைக் கேளீர்
நிலவுகள் இரண்டு என்றாலும்
தரும் காட்சிகள் பல
காணும் உயிர் ஒவ்வொன்றும்
அதன் உரிய நிலவுகள்
தனியே காணும்
அற்புதம் இங்கு உண்டு
வண்ணங்கள் அங்கு
மாறும் அவரவர்
எண்ணங்கள் போல்
நிலவுவிடு தூது
நிதர்சனம் இங்கு
நிலவும் நிலைக்கண்ணாடியாய்
உலவும்
உன் காதல் மனத்திற்கு ஓர் நிலவு
உன் காதலர் மனத்திற்கு ஓர் நிலவு
உன் மனப்போக்கிற்கு ஏற்ப
ஒரு நிலவில் மாற்றம்
உன் காதலரின் மனப்போக்கிற்கு ஏற்ப
மற்றொரு நிலவில் மாற்றம்
உன்னை உணர்த்த உன் காதலுக்கு வாய்ப்பு
காதலரின் தன்மை அறிய உனக்கும் வாய்ப்பு
நிலவு வண்ணங்களுக்கு என்று தனி
அர்த்தங்கள் இங்கில்லை
அகராதிகள் ஏதுமில்லை
உன்னை நீ அறி
உன்காதலையும் நீ அறி
வண்ணங்கள் அர்த்தங்கள்
அதுவே தெளியும்
இங்கு சிலர்
நிலவுகளில்லாமல் வாழ்ந்தவர்கள்
நிம்மதியில்லாமல் வாழ்ந்தவர்கள்
வரலாற்றுடன் மறைந்தவர்கள்
எங்கள் நிலவுகள்
கவிதையில் வருபவையல்ல
கவிதையாய் வாழ்பவை
காதலுக்கு சாட்சியல்ல
காதலின் காட்சிகள்
எடுத்துரைக்கும் மாட்சிகள்
- செல்வா
( விசித்திர உலக உலா தொடரும்.....)
பி.கு: Fantasy உலகம் சிறிது (அல்ல பெரிய) கற்பனைகளுடன் எழுத முயற்சி. விமர்சனங்கள்/கருத்துக்கள் அன்புடன் வரவேற்க படுகிறது.

No comments:
Post a Comment