Wednesday, February 3, 2016

ஆனந்தம்


புன்னகை தவழும்
புது தென்றல்
புகும் வாழ்வில்
பூக்கள் தூவும்

கனிவு பொங்கும்
கரு விழிகள்
கமழும் காதலில்
கார்மேகமாய் பொழியும்

சிரிப்பு தவழும்
சிறு உதடுகள்
சிந்தும் வார்த்தையில்
சீர்மை தரும்

அவற்றை யெல்லாம்
அங்கமாய் கொண்டநீ
அன்பை இணைத்து
ஆனந்தம் தருவாய்
ஆருயிர் பெண்ணே.


- செல்வா

No comments:

Post a Comment