Monday, February 1, 2016

கண்களுடன் கவிகள்


பார்வைக் கொள்ளாமல் இருக்கும் சிறுக்கி
தேர்வு செய்தேனுன்னை மனம் இணங்கி
வார்த்தையொன்று சொல்லடி கட்டழகி
நேர்த்திக் காண்போம் தினமும் பழகி

சேரும் மனங்கள் மாறும் குணங்கள்
வேரும் ஊறும் காதல்தரும் பழங்கள்
அருமை அனைத்தும் என்னவள்
அரும்பும் மலர்கள் நல்ல மலர்ச்சிகள்

ஆசைமொழிகள் பலவும் பேசி மகிழ்வோம்
நேசமுடன் நெஞ்சினிலே கனவுகள் வளர்ப்போம்
வாசம்வீசும் வாழ்வை எண்ணுவோம்
ஓசையின்றி கண்களுடன் கவிகள் பேசுவோம்

- செல்வா

No comments:

Post a Comment