Thursday, February 4, 2016

ஒழுங்கின்மைக் கோட்பாடு (Chaos Theory)


தெளிந்த நீருடை குளம்
ஓர் கல் எறிய
வட்ட சிற்றலைகள் வளையும்
நுண்ணலைகள் அங்கங்கே வடியும்
கூர்ந்து காண
கல்லின் எடையும்
எறியும் வேகமும்
சிற்றலைகளும்
தன்மைகள் நன்கு புரியும்

தெளிந்த நீருடை குளம்
பல கற்கள் தொடந்து
கால வித்தியாசத்தில்
வேக வித்தியாசத்தில்
எறிய
வட்ட சிற்றலைகள் பலவும் தோன்றும்
ஒன்றையொன்று தீட்டும்
நுண்ணலைகள் எங்கும் இருக்கும்
ஒழுங்கற்ற நிலை உண்டாகும்
தன்மைகள்
ஒரு தோற்றத்தில் உடையாது
ஒரு தேற்றத்தில் அடையாது

வாழ்வும் மனமும் என்றும்
ஒழுங்கற்ற முறையில் ஒடுங்கும்
வாழ்வில் ஒழுங்குமுறைகள்
வளர வளர
ஒழுங்கற்ற முறைகள் சிறு ஒடுங்கும்
நம் வாழ்விலும் பிறர் வாழ்விலும்
குழப்பங்கள் பல மறையும்

- செல்வா

No comments:

Post a Comment