Wednesday, February 10, 2016

கடற்கரை


மெல்ல மனதை வருட
பட்டும் படாமல் ஏக்கத்தில் என்னை விட்டு
செல்லும் அலைகள்

தத்தளிக்கும் கடலலைகள் வேண்டாமென
ஒதுங்கிய பாய்மரத்தின் நிழலில்
ஒதுங்கும் காதலர்கள்

கவலைகள் சிறிதுமின்றி மீண்டும்
கட்டினான் அந்த சிறுவன்
அலையழித்த மண்கோட்டையை.

என்னை மிகவும் உள்ளே இழுத்தது
எல்லா அலைகளை விட வேகமாய்
அலைகளுடன் விளையாட்டு

கடல் அலைகள் கரை தொடுமுன்
ஒடி மறைந்துக் கொண்டது
வளையில் நண்டு

காதல் மயக்கத்தில்
சுண்டல் வாங்குகிறோம் பசிமயக்கத்துடன்
உள்ள ஏழை சிறுவனிடம்

- செல்வா

பி.கு: ஹைக்கூ கவிதை எழதும் முயற்சி

No comments:

Post a Comment