Tuesday, February 16, 2016

இரவின்மடி


இரவின்மடி
உந்தன் நினைவுமடி
பொருந்தா அடி
கவிதைப் போல் உறுத்துதடி
அது நீயென்னை காணா கணமடி

***

உறக்கம் தாரா மயக்கமாய்
கொய்தும் கொய்யாப்பழமாய்
நீ உரைத்த காதலாய்
கண்ணில் சுழல்வாய்

***

இரவில் அறிந்தேன் ஏகாந்தம்
காதல் கொண்ட மகரந்தம்
உயிரில் உணர்ந்தேன்
உன் மின்காந்தம்

***

இல்லை என்று நீ சொன்னதில்லை
இரவில் என் நினைவில் என்றுமில்லை
அது என்னாதிக்க எல்லை .

- செல்வா

No comments:

Post a Comment