Friday, February 26, 2016

இரசிகன்


பாலைக் காணவில்லை
பதற்றத்தில் அம்மா
பாலாபிஷேகம் செய்ய
வைத்த பாலாடா என்று
மகனிடம் சொல்ல

மகனோ பால் பசிக்கும்
குழந்தைக்கு கொடும்மா
அதை விட்டு
கல்லுக்கு விரயம்
செய்யாதே ...

சொல்லாதே அப்படி
ஆகிவிடும்டா சாமி குத்தம்
என்று அம்மா

மகனோ
மெல்ல மெல்ல
ஏறினான்
பொழிந்தான்
பாலை
தன் கதாநாயகனின்
பசிக்கொண்ட
கட்-அவுட்டுக்கு …

- செல்வா

No comments:

Post a Comment