இதயமென்றும் இன்புற இடறும் இடையும்
நாடகமாய் நளினமாய் நடக்கும் நடையும்
உள்ளத்தை உலுக்கும் உடுத்தும் உடையும்
கவரும் கட்டழகியின் கவிதைப்பாடும் கண்களும்
மதிதனை மயக்கும் மல்லிகையின் மணமாய்
வானில் வட்டமிடும் வருடும் வண்ணத்துப்பூச்சியாய்
மனதில் மலர்மாலையுடன் மதுரமாய் மனோரதம்
ஓகோவென்று உவமைகளுடன் ஒன்றும் உண்மைகள்
ஓராயிரம் உறுத்தல்கள் ஒறுத்தா உரசல்கள்
ஒப்பும் உணர்வுகளுடன் ஒளியும் உள்ளங்கள்
ஒல்லும் உபயங்கள் உதவும் ஊக்கங்கள்
உயிரில் ஊறுநீராய் உன்னைப்பற்றி உவப்பு
- செல்வா
No comments:
Post a Comment