Wednesday, February 10, 2016

மனோரதம்


இதயமென்றும் இன்புற இடறும் இடையும்
நாடகமாய் நளினமாய் நடக்கும் நடையும்
உள்ளத்தை உலுக்கும் உடுத்தும் உடையும்
கவரும் கட்டழகியின் கவிதைப்பாடும் கண்களும்
மதிதனை மயக்கும் மல்லிகையின் மணமாய்
வானில் வட்டமிடும் வருடும் வண்ணத்துப்பூச்சியாய்
மனதில் மலர்மாலையுடன் மதுரமாய் மனோரதம்

ஓகோவென்று உவமைகளுடன் ஒன்றும் உண்மைகள்
ஓராயிரம் உறுத்தல்கள் ஒறுத்தா உரசல்கள்
ஒப்பும் உணர்வுகளுடன் ஒளியும் உள்ளங்கள்
ஒல்லும் உபயங்கள் உதவும் ஊக்கங்கள்
உயிரில் ஊறுநீராய் உன்னைப்பற்றி உவப்பு

- செல்வா

No comments:

Post a Comment