நாரும் இங்கு மணக்கும்
பூவின் அருமை உணர்த்தும்
தேவையிங்கு மாற
வேண்டியவை வேண்டாவையாக
பூவும் இங்கு நாறும்
****
நாளும் இரவில் உலா
முன் நின்றும் தெரியவில்லை நிலா
வரவுகள் இருக்க
லாபம் கணக்கில் தெரிய
தேவை என்றதும் வேரிலே பலா
****
தீராமல் மனதின் தாகம்
கொள்ளும் மனதில் வேகம்
கண்ணைக் கட்டும்
எல்லையதும் மீறும்
தழலாய் எரியும் மோகம்
****
மனதோடு மெல்ல உரசல்
வயிற்றில் கரைசல்
தாவும் மனம்
தேடும் தினம்
கண்ணோடு கலந்த காதல்
- செல்வா
பி.கு: லிமெரிக் வகையில் எழுதியது
No comments:
Post a Comment