ஞாயிறு என்றதும்
ஞாபகம் ஒன்று வந்தது
ஞாளியாய் உழைத்த அலுப்பை மறக்க
ஞான்றும் மறவாது போல்
ஞாலம் சுற்றும் நாளல்லவா
ஞாதிகள் பலரைக் காணலாம் அல்லது
ஞாட்புகள் ஏதுமில்லாமல்
ஞானியாய் எதையும் காணாமல் கண் உறங்கலாம்
- செல்வா
பி.கு: ஞா வார்த்தைகள் வைத்து சிறுகவிதை சிறு முயற்சி.
ஞான்று - நாள், நேரம் , ஞாலம் - உலகம், ஞாதி - உறவினர், ஞாட்பு - போர், ஞாளி - நாய்
No comments:
Post a Comment