கருத்தும் உன்னால் உருபெறும்
கருத்தும் உன்னால் உருமாறும்
கருத்தும் உன்னால் களையும்
கருத்தின் கருத்தே நீயும்
உன்னோடு பல ஓட்டம்
உன்னாலே பல மாற்றம்
உன்னாலே பல காயங்கள்
உன்னாலே பல மருந்துகள்
கடந்தபின் புரியா நிற்போம்
எதிர்வருவா யென ஏங்குவோம்
உடனிருக்க அறியா திருப்போம்
உரைப்பேன் உன்னை என்றும்
கடக்க மூடியா கருப்பொருளே..
மனத்தில் உனை நிறுத்துவேன்
கைக்கூப்பி வணங்குவேன் - காலமே
நான் வணங்கும் கடவுள்
- செல்வா
No comments:
Post a Comment