காலமெல்லாம் என்னுடன் நீ
என்ற நினைவினில் நான்
காணும் கற்பனைகள் ஆயிரம்
கவிதையாய் வடிந்தன தினம்
உன் நினைவு பூங்காவில்
என் உலா எண்ணிகையில்
பூத்தன பூக்கள் நெஞ்சில்
மாலையாய் தொடுத்தன கவிதையில்
மனம் உன்னை நினைக்கையில்
உள்ளத்தில் நினைவு ஊற்று
என்னுள் உன்னை யெற்றி
அது தரும் ஆயிரம் பாட்டு.
- செல்வா
No comments:
Post a Comment