Wednesday, January 6, 2016

பழம்பெருமை


பழம் பெருமை மட்டும்
பேசியென் பயன் சொல்லடா
அதை நல்ல முறையில்
பாதுகாக்கத் தெரிய வேண்டுமடா

மனதில் ஆசை மட்டும்
கொள்ளுதலென் பயன் சொல்லடா
அதை ஆக்கம் கொள்ள
தேவையான முயற்சிகள் வேண்டுமடா

வண்ண கனவுகள் மட்டும்
கண்டென் பயன் சொல்லடா
அதை வாழ்வினில் காண
நல்லகாரியம் புரிய வேண்டுமடா

வளர்ச்சியை வாய் மட்டும்
வர்ணித்தலென் பயன் சொல்லடா
அதை சிறப்பாக எய்த
முறையான செயல்கள் தேவையடா

உள்ள குறைகள் மட்டும்
சொல்லியென் பயன் சொல்லடா
அதை உடனே நீக்க
உயரிய சீற்றம் கொள்ளடா

- செல்வா

No comments:

Post a Comment